Hôm nay :

Hotline: 0120 220 1889 - 0902 108 162

கழிவுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி மூலம் பொதுமக்கள் துன்பங்களை எதிர்கொள்வர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவிதித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலால் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வரதமணியை வாபஸ் பெறவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மத்திய மாகாணத்துக்கான பதில் ஆளுநராக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ளமையால் பதில் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தனது கட்டார் விஜயத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடவல, ரொசல்லாவை வனப்பகுதியில் இன்று (21) மாலை ஏற்பட்ட தீயினால், அவ்வனப் பகுதியின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சில விசமிகளின் நடவடிக்கையே இந்த தீபரவக் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.


நாட்டிலுள்ள 06 பேரில் ஒருவருக்கு நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் மூட்டுவலி ஆகிய நாட்பட்ட நோய்கள் காணப்படுவதாக குடிசனக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் விசேட நிபுணர் சந்திராணி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் அதிக தாக்கம் செலுத்துவதாகவும், ஆண்களை விட பெண்களிடத்திலேயே இந்த நாட்பட்ட நோய் அதிகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த கல்வித் தரம் உள்ளவர்களிடத்தில் இந்த நாட்பட்ட நோய் ஏற்படும் வீதம் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டவுன் ஹால் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த “ஸ்மார்ட் பஸ் ஹோல்ட்” மொபிடல் நிறுவனத்தின் பூர்ண அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரமும், எந்தவிதமான உபகரணங்களையும் பாவித்து இணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய Internet of Things எனும் எண்ணக்கருவுக்கு அமைய இது அமைக்கப்பெற்றுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதி, ATM வசதி, குடிநீர் போத்தல்கள் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளிட்ட மேலும் பல வசதிகளுடன் இந்த நவீன பேரூந்து நிலையம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பு நகரில் குவியும் குப்பைகளில், 50 வீதமானவை சிற்றூண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பவற்றிலிருந்து வெளியேற்றப்படுபவை என சிற்றூண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இவை தமது தவறான நடவடிக்கையினால் நிகழ்பவையல்லவெனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாயின் சிற்றூண்டிச் சாலைகளில் வெளியேறும் கழிவுகளை நூற்றுக்கு 20 வீதத்தால் குறைக்க முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Sản phẩm mới
Giầy Việt Nam
Xe đạp điện Việt
BACK TO TOP