வடவல, ரொசல்லாவை வனப்பகுதியில் இன்று (21) மாலை ஏற்பட்ட தீயினால், அவ்வனப் பகுதியின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில விசமிகளின் நடவடிக்கையே இந்த தீபரவக் காரணம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Khuyến Mãi